districts

img

கரும்பு அரவை காலத்தை நீடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருவள்ளூர், பிப். 2- கரும்பு அரவை காலத்தை ஏப்ரல்  வரை நீடிக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளியன்று (பிப்.2), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.  திருவாலங்காட்டில் அமைந்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு , திருவள்ளூர் மாவட்டம் முழுவதுமிலிருந்து கரும்புகள் கொண்டு வரப்படுகிறது. 2023-24 ஆண்டு பருவத்தில் இலக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் டன்கள் கரும்பு அரைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவ.22 அன்று முதல் அரவை துவங்கப்பட்டுள்ளது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பழமையானது என்பதால் ஒரு நாளைக்கு 1600 டன்கள் கரும்புகளை மட்டும் அறைக்கப்பட முடியும். இது வரை 93 ஆயிரம் டன் கரும்புகளை மட்டும் அரைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆணையர் மார்ச் 31 ல் அரவையை நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆணையர் சொன்ன காலத்தில் முடிக்க முடியாது. பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கரும்புகளை முழுவதுமாக அரைக்கும் வகையில் ஏப்ரல் வரை அரவை நீடிக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தினர். கரும்பு  டன் ஒன்றுக்கு ரூ.4000 என்ற விலையை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும், ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்துள்ளார். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.