ராணிப்பேட்டை, டிச. 1 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கலவை வட்டார பகுதிகளில் தொடர் மழையால் பல ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், வேளாண்மை துறை மற்றும் பயிர்கள் காப்பீடு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.