ராணிப்பேட்டை, ஜன. 27 – ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று (ஜன. 26) தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, விவ சாயிகள் சங்கம் முப்பெரும் உழவர் சங்கம் மாவட்ட தலைவர் பி. சேகர் தலை மையில் காவல்துறை அனுமதி மறுத்தும் டிராக்டர் வாகன பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த பேரணியை கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி வாலாஜா டோல்கேட் அருகில் (பைபாஸ்) துவக்கி வைத்தார். அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி, வாலாஜா பேருந்து நிலையம் வழியாக வாலாஜா சார்பதிவாளர் அலு வலகம் வரை சென்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இறுதியாக விவசாயி முனுசாமி நன்றி கூறி முடித்து வைத்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, மாவட்டப் பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன், வட்டாரத் தலைவர் நிலவு குப்புசாமி, செயலாளர் தாமோதரன், விவ சாயிகள் சங்கம் முப்பெரும் உழவர் சங்கம் மாநில தலைவர் கே.எம். வெங்கடேசன், மாவட்டத் தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் கே. பிச்சமணி உள்ளிட்ட ஏராள மானோர் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் பேரணியில் கலந்து கொண்டனர்.