districts

img

கடலூரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து, திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை அதே விவசாய விரோத கொள்கைகளை இப்போது மீண்டும் வேளாண்மை மூலம் கொண்டு வருவதை  எதிர்த்து கடலூரில் டிராக்டர் பேரணி இருசக்கர வாகன அணிவகுப்பு நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.சரவணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன்,  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, பால்ராஜ்,   விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.