districts

img

60 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம் சேதம்: 100 கிராமங்களில் விவசாயிகள் வேதனை

கடலூர்,அக்.29- கடலூர் மாவட்டத்தில் மங்க ளூர், நல்லூர் ஒன்றியங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து மங்களூர், நெடுங்குளம், சிறுமுளை, பெரு முளை, செவ்வேரி, ரெட்டாக்குறிச்சி உள்பட 100 கிராமங்களில் 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மானாவாரி பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். நன்கு வளர்ந்து வந்ததால் இந்த ஆண்டு வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்து விட்டதால், பெரும்பகுதி மக்கா சோளப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது.  ஒரு சில விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்த நிலையில், வழக்கத்தை விட படைப் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் விளைச்சல் அடியோடு அழிந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்து வரும் மக்காச்சோள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் ராஜா, கவிதா ஆகியோர் கூறுகையில், “படைபுழு தாக்குதலை தடுக்க பல மருந்துகளை தெளித்தாலும் பலனில்லை. வேளாண்மைதுறை அதிகாரிகள் பார்வையிட்டு  எங்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்”என்றனர். திட்டக்குடி அடுத்த நெடுங்குளம், செவ்வேரி பெருமுளை, சிறுமுளை கிராமங்களுக்கு சென்றபோது தண்ணீரின்றி மக்காசோளப் பயிர் முற்றிலும் கருகிவிட்டதால் சாகு படியை அழித்து மாட்டுக்கு தீவண மாக கொடுத்து வருவதை பார்க்க முடிந்தது.  பாதிக்கப்பட்ட விவசாயிகள் மக்காச்சோள பயிருடன் ஆட்சி யரை நேரில் சந்தித்து தங்க ளது உள்ள குமுறல்களை வெளிப்படுத்தினர். இயற்கை இடர்பாடுகள் மற்றும் நோய் தாக்குதலால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பது தொடர் கதையாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் அரசும் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாகும்.