districts

img

சிதம்பரம் காட்டுமன்னார்குடியில் நாளை விவசாயிகள் மறியல்

சிதம்பரம், அக். 9- காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் , காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்ட மைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை யில் சிதம்பரத்தில் நடைபெற்து. கூட்டத்தில் தவிச கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கே.சரவணன், ஆர்.ராமச்சந்திரன், விதொச  மாவட்ட செய லாளர் எஸ்.பிரகாஷ், தமிமுன் அன்சாரி (சிபிஐ), கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்க நிர்வாகிகள்  கண்ணன்,  காஜா மொய்தீன், அன்பு சித்தார்த்தன்(திக), விச குமராட்சி ஒன்றிய நிர்வாகிகள் வி.கே.ராதா, புஷ்பராஜ், டி.முனுசாமி, குளஞ்சி யப்பன் (பரங்கிப்பேட்டை),  சி.தர்மதுரை (கீரப்பாளையம்), எஸ்.மணி (புவனகிரி),  உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அக்டோபர் 11ஆம் தேதி சிதம்பரம், காட்டுமன்னார்குடி ஆகிய இரண்டு மையங்களில் ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது, டெல்டா பகுதிகளான சிதம்பரம் காட்டுமன்னார்குடி, குமராட்சி, ஆகிய பகுதிகளில் முழுமையான கடைய டைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பி னரையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.