கடலூர்,ஆக.8-
விவசாயிகளின் நெற் பயிரை அழித்த என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கடலூர், சேத்தி யாத்தோப்பு, விருத்தாசலம் ஆகிய மூன்று மையங்க ளில் விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
வளையமாதேவி கிரா மத்தில் புதிய பரவனாற்று மாற்று பாதையில் விவ சாயிகள் விளைந்த நெற் பயிரை அழித்ததை கண்டித்தும், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு புதிய நிலக் கொள்கையின் அடிப்படையில் மும்மடங்கு இழப்பீடு, நிரந்தர வேலை, மாற்று இடம், வீட்டு மனைப்பட்டா வழங்கிட வலி யுறுத்தியும், வேலை இழக்கும் விவசாய தொழி லாளர்களுக்கு உரிய நிவா ரணம், புறம்போக்கில் குடி யிருப்போருக்கும் மாற்று இடம் வழங்கிட வலி யுறுத்தியும் என்எல்சி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியினை கடலூர் மாவட் டத்திற்கு முழுமையாக செலவிட வலியுறுத்தியும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டங்கள் நடை பெற்றன.
கடலூரில் நடந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் கடலூர் ஜவான்பவன் அருகில் ஒன்று திரண்டனர். சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி தலைமையில் அண்ணா மேம்பால வரை பேரணியாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
விவசாயிகள் சங்கம் மாவட்ட துணை தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடையை மீறி அண்ணா பாலம் அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றிய செய லாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம், விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன், குமர குருபரன், வட்ட நிர்வாகிகள் தேவநாதன், கணேசன், முருகன், தமிழ்ச்செல்வன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் பன்னீர், ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், பகுதி செயலாளர் சுந்தர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேத்தியாதோப்பு
சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் ரவீந்திரன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாநில தலைவரும் கந்தர்வக் கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.கே.சரவணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எஸ்.பிரகாஷ், மாவட்ட பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் பாலக் கரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தப் போராட்டத்தில் சிபிஎம் நெய்வேலி நகர செயலாளர் ஆர். பால முருகன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.மாதவி, மாநில குழு உறுப்பினர் வி.மேரி, வாலிபர் சங்கத்தின் கலைச் செல்வன், சிஐடியு சங்கத்தின் வேல்முருகன், முத்துவேல், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.