விவசாயத்தையும், விவசாயிகளையும் வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் வட்டம் சைனகுண்டா வனச்சரக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கடாஜலபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ.ஏகலைவன், கே.சாமிநாதன் பி.காத்தவராயன், குடியாத்தம் வடக்கு தெற்கு செயலாளர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்.