விழுப்புரம், ஜூலை 22- தலித் மக்கள் குடியிருப்பு அருகே செயல்பட உள்ள புதிய தார் கலவை ஆலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் திங்களன்று (ஜூலை 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.முருகன், ஆர்.தாண்டவராயன், பி.சிவ ராமன், ஏ.நாகராஜன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட காந்தலவாடி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டு செயல்பட உள்ள சூடான தார் கலவை ஆலையானது தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 400மீ தொலைவிலும், பொதுப் பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி, மற்றும் நீர்வரத்துக்கு வாய்க்காலுக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. சூடான தார் கலவை ஆலை இயங்கு வதற்கு பல்வேறு விதிமுறைகளை அரசும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விதித்துள்ளது. அரசின் எந்த ஒரு விதி முறையையும் பின்பற்றாமல் உள்ளது. கடும் வெப்பம், அனல் காற்று, துர்நாற்றம் ஜல்லி துகள்களால் அதிகளவு தூசி மற்றும் கடும் ரசாயனம் கலந்த புகை மண்ட லத்தால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தார் தொழிற்சாலை திறப்பை நிரந்தரமாக கைவிடவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.