districts

img

வனவிலங்கு தொல்லைகளில் இருந்து பாதுகாக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேலூர், ஜூலை 23 - வனவிலங்குகள் தொல்லையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், கேரள மாநிலம் போன்று காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும், யானை வழித்தடம் என்ற பெயரில் விவசாயிகளை விளை நிலங்களிலிருந்து வெளியேற்றுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டில்  வட்டத் தலைவர்கள்  சிஎம்.நடராஜன், தசரதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன் துவக்கி வைத்தார். மாநில துணைச் செயலாளர் கே.நேரு நிறைவு செய்து பேசினார். மாவட்ட தலைவர் சி.எஸ். மகாலிங்கம், பொருளாளர் ஜி.நரசிம்மன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பி.குணசேகரன் மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன், சிஐடியு நிர்வாகிகள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.