கடலூர், பிப்.8 – ஒன்றிய பாஜக அரசு, நெல் கொள்முதல் நிலை யங்களை தனியார் மய மாக்கும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்கத்தின் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட தமிழகத்தில் திரு வள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்க ளில் சனிக்கிழமை (பிப்,8) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கிராமங்களில் விளையும் செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இதற்காக நிரந்தர கட்டி டங்கள், குடோன்கள் உள்ளன. இதில் பல்லா யிரக்கணக்கான ஊழி யர்கள் செயல்பட்டு வரு கின்றனர். இந்த நிலையில், நெல் கொள்முதல் தனியார் மயமாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு இயங்கி உள்ளதை கண்டித்து கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர். கே.சரவணன், பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் பி.லட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர்கள் ஆர்.லோகநாதன், கே.செல்வகுமார், முத்து லட்சுமி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர். டி.ஏழு மலை தலைமையில் நடை பெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செய லாளர். ஏ.வீ. ஸ்டாலின் மணி பேசினார். மாவட்டப் பொருளாளர் எம்.சி. ஆறுமுகம்,தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செய லாளர் எஸ்.ஜோதிராமன், மாவட்ட துணை செய லாளர் எம்.வி. ஏழுமலை, மாவட்ட துணை தலை வர்கள் பி.தெய்வீகன், வி.நாகராஜ், தரணி சக்கரை ஆலை தலைவர் வி.ரகுராமன், செயலாளர் ஜி.அருள்தாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.