districts

img

காய்ந்த தக்காளி செடி: வேதனையின் விளிம்பில் விவசாயிகள்

கிருஷ்ணகிரி,மே.5- மழை பொய்த்ததால் பாரூர் ஏரியும் ஆழ்துளை கிணறும் வற்றியதில் தக்காளி சாகுபடி சரிந்துள்ளது. போச்சம்பள்ளி வட்டம், முதுகம்பட்டி, பனங்காட்டூர், கோட்டப்பட்டி, வேலம்பட்டி, அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். ஓராண்டுக்கு முன்பு வரை இங்கு விளை யும் தக்காளியை ராயக்கோட்டை மொத்த சந்தையிலும்,போச்சம்பள்ளி சந்தை யிலும்,சில்லறையாகவும் நல்ல விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வந்தனர்.தற்போது தக்காளி சாகுபடி காய்ந்து கருகிய தால் விவசாயிகள் மத்தியில் வேதனையும், நட்டமும் மட்டுமே மிஞ்சியுள்ளது.  இது குறித்து அப்பகுதி ஊராட்சி உறுப்பி னரும், சிபிஎம் வட்டக் குழு உறுப்பினரு மான கடல் வேந்தன் கூறியதாவது, கடந்த ஓராண்டாக மழை இல்லாததாலும், கடும் வெயில் வாட்டி வருவதாலும் பாரூர் பெரிய ஏரியும் வற்றிப் போனது, ஆழ்துளை கிணறுகளில் நீர் வறண்டு விட்டது. இந்நிலையில் சாகு படி செய்யப்பட்ட தக்காளி வயல்கள் முற்றிலும் கருகி வருகிறது. நீர்பற்றாக்குறை யால் தக்காளிகள் கோலிகுண்டு அளவில் சிறுத்து வெம்பி பழுக்கிறது. மேலும் மின்சார கட்டணம் செலுத்த இயலா மலும்,வேறு விவசாயம் செய்ய முடியாமலும் காய்ந்து கருகும் தக்காளி வயல்களை பார்த்து விவசாயிகள் கடும் வேதனை அடைந்துவருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுவதாக தெரிவித்தார்.