districts

img

விவசாயிகளிடம் நெல் வாங்கி பண மோசடி

திருவண்ணாமலை, ஜுலை 1-  திருவண்ணாமலை மாவட்டம் வேட்ட வலம் சாலை ஏந்தல், பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில், நம்மாழ்வார் விவசாய சந்தையில்  ஜெய் கணேஷ் என்பவர் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் சுமார் 5 கோடி ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயி களுக்கு தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். நெல்லுக்கு உரிய பணமாக ஜெய் கணேஷ் என்பவர், பல விவசாயிகளுக்கு கொடுத்த வங்கி காசோலையில் பணம் இல்லை என்று வங்கியில் இருந்து திரும்பி வந்தது. ஏமாற்றப்பட்ட விவசாயிகள் கடந்த 27 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விவசாயிகளை ஏமாற்றிய ஜெய்கனேஷ் ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டு அவரிடம் விசாணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்களின் நெல்லுக்கு உரிய விலையை பெற்றுத்தர வேண்டும் என்று,  மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனுக்களை அளித்த னர். அப்போது தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், செயலாளர் அ.உதயகுமார், பொருளாளர் அருண்குமார், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், ஒன்றிய நிர்வாகி ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.