விழுப்புரம், ஜூலை 18-
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுணம் மதுரா கிருஷ்ணா நகர் பகுதியில் சர்வே எண்: 72/8 நிலத்தில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த குடிநீர் கை பம்பு தற்போது விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பாலமுரு கன், சுரேஷ், பாலச்சந்தர் ஆகியோர் ஆக்கிரமித்து போலி பட்டா தயாரித்து அது எங்களுக்கு சொந்தமான இடம் என கூறி வேலி அமைத்துவிட்டனர்.
இந்த போலி பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஆண்டில், கண்டாச்சி புரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து, வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு நடந்தது. அப்போது, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு, போராட்டத்தை தள்ளி வைத்தனர்.
அதன்பிறகு, பல முறை நினைவூட்டல் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. பிறகு, உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்தனர். மீண்டும், வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பட்டாவை ரத்து செய்ய கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்று உறுதி கொடுத்தார். ஆனால், இதுவரையில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஜூலை 18 அன்று கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக முன்பு தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் தர்ணா நடைபெற்றது. வட்ட பொருளாளர் எம்.நாராயணன் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்டத் தலைவர் ஆர்-தாண்டவராயன், மாவட்டத் துணைத் தலைவர் எ.நாகராஜ், சிஐடியு மாநில குழு உறுப்பினர் வி.உதய குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, விவசாய சங்கத்தின் வட்டத் தலைவர் எம்.ராமலிங்கம், வட்டச் செயலாளர் ஓகே.முருகன், நிர்வாகிகள் எம்.விமல், டி.பரமானந்தம், கே.முருகன் என்.வீரன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.