கிருஷ்ணகிரி,டிச.25- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் உள்ளது ஓபேபாளையம். இந்த கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் 50 ஆண்டு களுக்கும் மேலாக குடியிருந்து வரு கின்றனர். இவர்கள், ஓடை புறம்போக்கு நிலத்தின் கரையை சாலையாக பயன் படுத்தி வந்தனர். இந்த நிலத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு அதிகாரி கள் தனி நபருக்கு பட்டா போட்டு கொடு த்துள்ளனர். பட்டா பெற்ற நபர், பாதை யின் குறுக்கே முள்வேலி அமைத்தார். இதனால், போக்குவரத்திற்கு வழி யின்றி அவதிப்பட்ட இருளர் மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலை வர்களிடம் முறையிட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தலைவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், முள்வேலியை அகற்ற வேண்டும் என்றும் ஓடை புறம்போக்கு நிலத்திற்கு கொடுக்கப் பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். வழக்கமாக பயன்படுத்தி வந்த பாதையை சாலையாக மாற்றித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் தனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில்,இந்த கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் முரளி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலா ளர் பி. பெருமாள், மாவட்டச் செயலா ளர் பிரகாஷ்,தலைவர் முருகேஷ், பொருளாளர் எம்எம்.ராஜு, சிபிஎம் வட்டச் செயலாளர் முருகன், மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செய லாளர் குமாரவடிவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், கோயில் நில குத்தகைதாரர் சங்க செய லாளர் அனுமப்பா,மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் மோகன்தாஸ் தலைமையில் அரசு அதி காரிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் பெரு மாள், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகி யோர் பங்கேற்ற அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, ஓபேபாளையத்தில், பாதையின் குறுக்கே தனிநபர் அமைத்துள்ள முள் வேலியை அகற்றி பாதையை சீர மைத்து கொடுக்க வட்டாட்சியர் உடனடி யாக உத்தரவிட்டார். மேலும், தட்சிண திருப்பதி நகர் பழங்குடி மக்களிடம் வாங்கி சென்ற பட்டாவை திரும்ப ஒப்படைக்கும் வகை யில் அடையாளமாக 2 நபர்களுக்கு உடனடியாக பட்டாவை அதிகாரி வழங்கினார். மீதமுள்ள அனைவருக் கும் இரண்டு நாட்களில் திரும்ப ஒப்ப டைப்பதாகவும் அவர் தெரிவித்தார். படுமோசமான நிலையில் உள்ள பண்டப்பள்ளி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் ரூ.75 லட்சம் கேட்டுள்ளதாகவும் நிதி கிடைத்த உடனே சாலையை சீரமைத்து கொடுப்பதற்கான கடிதத்தையும் வழங் கினர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றது.