districts

img

விவசாயிகள் சங்க தொடர் போராட்டத்திற்கு வெற்றி என்.சங்கரய்யா நகருக்கு மின்சாரம்

கிருஷ்ணகிரி, நவ.29- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி பகுதி துப்புகானப்பள்ளி அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு ஏழை மக்கள் குடியிருப்பதற்கு மாநில அரசால் நிலம் வழங்கப்பட்டது.  இந்த இடத்தில் 12 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதற்கு என்.சங்கரய்யா நகர் என விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெயர் சூட்டப்பட்டது. புதிதாக உருவான இந்த நகருக்கு மின்சாரம்,சாலை வசதி, குடிநீர் வசதி எதுவும் இல்லை. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்படு கின்றனர். எனவே, இந்த மக்களின் அடிப்படை வசதிகளுக்காக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது, மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கம் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என மாவட்டத் தலைவர் எம்.முருகேஷ் கூறினார். வட்டத் தலைவர் அஹமத் பாஷா,துணை தலைவர் விஜயகுமார்,துணை செயலாளர் ராமச்சந்திரப்பா உடனிருந்தனர்.