ராணிப்பேட்டை, அக். 22 – ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், பெருமாந்தாங்கல் பகுதி யில் சுமார் 30 பூம்பூம் மாட்டுக் காரர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வரு கின்றன. இவர்கள் நிரந்தர மான வீடு இல்லாமல் மழைக் ்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் பல்லாண்டு காலமாக ஒரே இடத்தில் வசித்து வந்தாலும் இதுவரைக்கும் குடும்ப அட்டையும் வழங்கப்பட வில்லை. இந்த நிலையில், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரகுபதி தலை மையில் அக்.21 திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித் தது, பூம்பூம் மாட்டுக்காரர் கள் குடும்பங்கள் அனைத் துக்கும் குடும்ப அட்டை உடனடியாக வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கள் கட்டிக்கொடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர்.