டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சுற்றுலா வாகன நிறுத்த உறுப்பினர் ஆர்.ரவி அண்மையில் காலமானதையொட்டி அவரது குடும்பத்திற்கு பாதுகாப்புநிதி வழங்கும் நிகழ்வு திங்களன்று (செப்.30) சாலை போக்குவரத்துதொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் வி. குப்புசாமி, ரவியின் குடும்பத்தாரிடம் 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், பொதுச்செயலாளர் எம். உதயகுமார், சிஐடியுமாவட்ட பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.