சென்னை, ஜன. 27 - சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜன.26) வில்லிவாக்கத்தில் குடும்ப விழா நடைபெற்றது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, பல்வேறு போட்டிக ளோடு நடைபெற்ற இந்த நிகழ்வில், மிக்ஜம் புயல் வெள்ளத்தில் பணியாற்றிய வர்களுக்கு பாராட்டு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தலைமை பொறியாளர் ஆர்.சிவமுருகன், மேற்பார்வை பொறியாளர் வி.சிவகுமார், பகுதி துணை பொறியாளர் பி.டி.சுரேஷ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.சுந்தரம், சங்கத்தின் பொதுச் செய லாளர் மு.பழனி, துணைத் தலைவர்கள் சி.சத்யநாதன், எஸ்.சீனிவாசன், இ.ராஜன் உள்ளிட்ட பலர் பேசினர்.