districts

img

புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் மீது பொய் வழக்கு: சிஐடியு கண்டனம்

புதுச்சேரி, ஆக.8- சாலையோர வியாபாரிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கைவிட கோரி சிஐடியு சார்பில்   புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுச்சேரியில் நகரப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் சீர்குலைத்து வழக்குப் பதிவு செய்வதை கைவிட வேண்டும். புதுச்சேரி நகராட்சி சார்பில் விற்பனை குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்த வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், துணைத்தலைவர்கள் கொளஞ்சியப்பன், மதிவாணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் வடிவேல், பொருளாளர் வீரமணிகண்டன் நிர்வாகிகள் சூரியன், ராமசாமி, முருகன், சேவியர், அந்தோணி குரூஸ், அன்பழகன், கெம்புராஜ், பூரணி, எல்லப்பன் உட்பட திரளான சாலையோர வியாபாரிகள் இப்ப போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக காமராஜர் சிலை அருகிலிருந்து சாலையோர வியாபாரிகள் ஊர்வலமாக வந்தனர்.