காஞ்சிபுரம்,ஆக.2-
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் என்னும் ஆட்சேர்ப்பு நிறுவ னம் பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல் படுத்துவதற்காக பசல் பீமா உதவியாளர் களை ஆட்சேர்ப்பு செய்வது போலியாக விளம்பரம் செய்து, ஆந்திர மாநிலத்தில் 829 பசல் பீமா உதவியாளர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்து விண்ணப்பக் கட்டண மாக ரூ.250 வசூலித்துள்ளது தெரிய வருகிறது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்கு பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எவ ரும் பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக வெளியிடப்படும் போலியான விளம்பரங் களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.