கடலூர், ஆக.2 - கடலூர் சிப்காட்டில் செயல்பட்டு வரும் டாக்ரோஸ் கெமிக்கல் இந்தியா நிறு வனத்தில் 235 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊதிய-உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்து 28 மாதங்களை கடந்தும் புதிய ஒப்பந்தத்தை முடிக்காமல் காலம் கடத்தி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், உணவகம் புறக்கணிப்பு, உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம், வாயில் கூட்டம் பல கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜூலை 27 அன்று முதல் சிஐடியு சார்பில் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது வருகிறது. டாக்ரோஸ் எம்பிளாய்ஸ் யூனியன் சிஐடியு தலைவர் ஆர்.கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.தேவநாதன், பொரு ளாளர் பி.குமார் துணைத் தலைவர் ஆனந்த பாஸ்கர், டிவிஎஸ் தொழிற்சங்க தலைவர் சக்திவேல், செயலாளர் அருள் செல்வம், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சிப்காட் தலைவர் ஆர்.ஆளவந்தார், செயலாளர் பி. குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.