districts

img

மாநகராட்சி வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை

சென்னை மாநகராட்சி மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்காக ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட மாநகராட்சி பணிமனையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.