districts

img

பயிர் காப்பீடு செய்ய நவ.30 வரை கால நீட்டிப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்

கடலூர், நவ.19- பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக வேளாண் உழவர் நலத்துறை  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். வருகிற 25 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும்  அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியை அமைச்சர் பார்வையிடடார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை இருந்து வந்தது. தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்வதற்கு கூடுதல் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விடுபட்ட விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு பதிவு செய்ய வேண்டும் என்றார்.  ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.