திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அடிவாரத்தில் திங்களன்று (ஜூலை 29) செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் கருப்பணராஜவேல் ஆகியோர் உள்ளனர்.