ராணிப்பேட்டை, ஜூன் 15- ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பெல்லியப்பா நகர் பகுதி சேர்ந்தவர் ரகோத்தமன் (54). இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். வாலாஜாபேட்டை அடுத்த பூண்டிகிராம பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (54), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரகோத்தமன் இவரது நண்பர். இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது ராஜேந்திரன் கட்டையை எடுத்து ரகோத்த மன் தலை மீது பலமாக தாக்கினார். இதில் ரகோத்த மன் உயிரிழந்தார்.
இதையடுத்து ராஜேந் திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.