districts

img

வேலூரில் அரசு ஊழியர்கள் மாலை நேர தர்ணா

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 21 மாதகால நிலுவைத் தொகை. முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் டி.டி.ஜோஷி தலைமையில் தர்ணா நடைபெற்றது. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பா.வேலு கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆர்.சேகர், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.