districts

சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம் அம்மாப்பாளையம் பெரியார் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மக்களவை உறுப்பினர் உறுப்பினார் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்க துணைத்தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கிருஷ்ணகிரி நகராட்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நகராட்சி தலைவர் பரிதா நவாப் மகளிர் குழு தலைவிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.


போச்சம்பள்ளி வட்டம், நாகோஜன அள்ளி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் வட்டச் செயலாளர் சாமு, வார்டு உறுப்பினர் கடல் வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஓசூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் பழனி கலந்து கொண்டு ஊழியர்கள், தூய்மை காவலர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்.


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நெய்வேலியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில செயற்குழு உறுப்பினர் வி.மேரி, மாவட்டச் செயலாளர் பி.மாதவி, நகரச் செயலாளர் தனலட்சுமி, தலைவர் ராணி, சிஐடியு தலைவர் ெஜயராமன், பொருளாளர் சீனிவாசன், சிபிஎம் நகரச் செயலாளர் பாலமுருகன், நுகர்வோர் அன்பழகன், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், ரோட்ரிக் கிளப் தலைவர் ரமேஷ், ஆர்ச்சி கேட் செயலாளர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.