districts

img

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல்

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல்

ராணிப்பேட்டை,ஜன.15– ராணிப்பேட்டை உழவர் சந்தையில் புதனன்று (ஜன.15) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) கலைச்செல்வி, நிர்வாக அலுவலர் சி. முருகன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, வாலிபர் சங்க பொறுப்பாளர் வி. செந்தில் குமார், வி.ச உழவர் சந்தை கிளை தலைவர் பி. குபேந்திரன், செயலாளர் சங்கீதா, சித்ரா, கனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி  மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியக் குழு தலைவர் தாமோதரன்,ஒன்றிய குழு துணைத் தலைவர் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சி வேல், செந்தில்முருகன், உதவி பொறியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிஐடியு ஆட்டோ சங்கம் புதுச்சேரி மரப்பாலம் கிளை சார்பில் மூன்றாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கிளைத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், சமூக ஆர்வலர்கள் சின்னத்தம்பி, அறம் நிஷா, நிர்வாகிகள் ஏழுமலை,முரளி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கிளையின் சார்பில்  அனைத்து  சங்க உறுப்பினர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் கரும்பு வழங்கினர்.