கிருஷ்ணகிரி,ஏப்.30- ஓசூரில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 120 ஏக்கர் பரப்பளவிலான ராம நாயக்கன் ஏரி உள்ளது.ஏரியின் தெற்கில் உள்ள உள்வட்ட சாலை பாலத்தை ஒட்டி யும் மேற்குப் பகுதியில் தனியார் நிர்வாகத் தால் நிர்வகிக்கப்படும் அரசு பூங்காவில் இருந்து சிஷ்யா தனியார் பள்ளி வரை 5 ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி செல வில் அமைக்கப்பட்ட நடை பயிற்சி சாலை ஓரமும் ஏரிக்குள் சில மர்மநபர்கள் கோழி கழிவுகளை அதிக அளவில் கொட்டி வருகின்றனர். இதனால் ஏரியில் உள்ள நீர் கடுமையாக மாசடைந்து கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் காலை மாலை இரு நேரமும், தினமும் நடை பயிற்சி செய்து வரும் 500 க்கும் மேற்பட்ட வர்கள் கடும் துர்நாற்றம் மற்றும் வியாதி பரவும் அச்சத்தால் நடைபயிற்சி செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி களிடம் புகார் அளித்துள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதியில் கொட்டியுள்ள கோழி கழிவுகளையும் குப்பைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.