districts

img

தொழில்முனைவோர் உச்சி மாநாடு

சென்னை, செப்.27- தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) மற்றும் தொழில்முனைவோர் இயக்குனரகத்துடன் இணைந்து வடபழனி வளாகத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மேலாண்மை துறை தொழில்முனைவோர் உச்சிமாநாட்டினை நடத்தியது.  “INNOVRITI 2023’’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தமாநாட்டில் முன்னணி கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்  கலந்துகொண்டனர். இதில்  தலைமை விருந்தினராக பங்கேற்றபேசிய தொழில்முனைவோர் சி.கே.குமாரவேல், ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்புகளை  மாணவர்கள் கண்டறிய வேண்டும் என்றார்.  கல்விநிலையத்தின் அகடமிக்ஸ் குழு இயக்குநர்  டாக்டர்.எஸ்.ராமச்சந்திரன், பிளாஸ்டிக் மற்றும் இதர மக்காத பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி  இணை இயக்குநர் டாக்டர். சாந்தனு பாட்டீல்  உள்பட பலரும் மாநாட்டில் பேசினர்.