வேலூர், செப். 5 - இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டம் சார்பாக வேலூர், காட் பாடியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. வேலூர் மண்டித் தெருவில் நடைபெற்ற இயக்கத்திற்கு வேலூர் கோட்டத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.பழனிராஜ், காப் பீட்டு கழக ஓய்வூதியர் சங்கம் தசரதன், சிஐடியு எஸ்.பரசுராமன், அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்கம் ஜி.நரசிம்மன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மக்கள் சேமிப்பை பாதிக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரியை அகற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதேபோன்று காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பொருளாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்ட துணைத் தலைவர் எஸ்.ராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.