districts

சென்னை முக்கிய செய்திகள்

நகைக் கடையில் பணம் திருட்டு ஊழியர் கைது

சென்னை, நவ. 19- ஆழ்வார்பேட்டை கோ-ஆப்ரேட்டிவ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ச.தினேஷ் (43).  தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான இவர், ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை இரண்டா வது சந்தில் வெள்ளிப் பொருள்கள் விற்கும் நகை கடை  நடத்தி வருகிறார். தினேஷ், தேனாம் பேட்டை காவல் நிலை யத்தில் கடந்த10ஆம் தேதி புகார் அளித்தார். அதில், எனது கடையை கடந்த 9ஆம் தேதி வழக்கம்போல் பூட்டிவிட்டு வந்தேன். பின்னர் 10ஆம் தேதி காலை கடையை திறக்க சென்றேன். அப்போது கடையின் பாதுகாப்பு பெட்டக அறை பூட்டை உடைத்து, அதில் இருந்த 20 கிலோ வெள்ளி நகைகள், பொருட்கள், ரூ. 5 லட்ச ரூபாய் திருடப்பட்டிருந்தன. இந்த சம்பவத்துக்கு பின்னர் மாயமான கடை ஊழியர் பெங்களூருவைச் சேர்ந்த பாபுலாலை (54) காவல்  துறையினர் கைது செய்த னர். அவரிடமிருந்து 20  கிலோ வெள்ளி நகை கள், ரூ.4.80 லட்சம்  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கால்வாய் பணியின் போது  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குக சிபிஎம் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் கோரிக்கை

சென்னை, நவ.19- மழைநீர் கால்வாய் பணிகள் காலதாமதம், பணியின் போதுபாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டம் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் திங்களன்று (நவ. 18) நடைபெற்றது. கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சென்னை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் பேசுகையில், கடந்த கூட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு இப்போது எழுத்துபூர்வமாக பதில் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த கூட்டத்தில் குடிநீர் உப்பாகவும், கலங்கலாகவோ, மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது என்றும், வி.பி. நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். தற்போது உப்புத் தன்மையில்லாமல், கலங்கல் இல்லாமல் தண்ணீர் வருகிறது. பாதாள சாக்கடை பணி எப்போது நடைமுறைக்கு வரும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பகுதி பொறியாளர் வேணுகோபால், அடுத்த மாதம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றார். ஜெய்ஹிந்த் நகர் மின் மாற்றி கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு, மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரை வில் பணி முடிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது. மழைநீர் கால்வாய் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறு கிறது. பல இடங்களில் துண்டு துண்டாக கட்டப்பட்டு இணைப்பு இல்லா மல் உள்ளது. பல வீடுகளின் சுற்றுச்  சுவர்கள் இடிந்துள்ளது. பல வீடு களின் மின் இணைப்பு கேபிள்கள் அறுக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு அதை சீரமைத்துக் கொடுக்காமல் ஓர் ஆண்டு காலமாக காலம் தாழ்த்துவது முறை யல்ல. தற்போது சிலருக்கு மட்டும் ஒரு பகுதி செங்கல், மண், சிமெண்ட் வழங்கப் பட்டுள்ளது.  ஆனால் அதற்குண்டான கூலி வழங்கப்படவில்லை. அந்த ஒப்பந்ததாரர் எந்த அதிகாரிக்கும் பதில் சொல்வதில்லை. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும் மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் 3 கி.மீ. தூரம் இடைவெளி இல்லாமல் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படு கிறது. போக்குவரத்து காவலர்கள் மூலம் நெரிசலை சரிசெய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கடுமையாக உயர்ந்த காய்கறி விலை

சென்னை, நவ. 19- காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழையின் தாக்கத்தினாலும், போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாததாலும் காய் கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை, முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் விலை ஒரே நாளில் ரூ.50 உயர்ந்து 160 ரூபாய்க்கு, எலுமிச்சம் பழத்தின் விலை 70 ரூபாயாக இருந்த நிலையில் ரூ.50 உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் ரூ. 80, வெங்காயம் கிலோ ரூ. 75, பீட்ரூட் ரூ. 65, உருளைக்கிழங்கு ரூ. 50, அவரை ரூ. 50, தக்காளி ரூ. 40, கேரட் ரூ. 40, கத்தரிக்காய் ரூ. 30, வெண்டைக்காய் ரூ. 30, காலிபிளவர் 20, முட்டைகோஸ் 20, கோவக்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 55 என விற்பனை செய்யப்பட்டது. பூண்டு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இஞ்சி விலை மட்டும் 25 விழுக்காடு குறைந்துள்ளது.

புதிய தலைமுறை தொலைகாட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் நீக்கம்?  சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

சென்னை,நவ.19- “புதிய தலைமுறை” தொலைக்காட்சி யில் பணியாற்றும் ஊழியர்களில் 50க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்படுவதாக சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்  கண்ட னம் தெரிவித்திருக்கிறது.  இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எல்.ஆர்.சங்கர். பொதுச் செயாலாளர் வ.மணி மாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உலக நடப்புகளை அலசி ஆராய்ந்து, பல சமயங்களில் தீர்ப்புகள் போல் கருத்துக் களைத் தெரிவித்தும் வரும் ஊடகங்கள், தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் களுக்கு அநீதி இழைப்பது ஏற்க முடியாத தும், துன்பமானதும் ஆகும்.  ‘புதிய தலைமுறை’ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தொழில் தகராறு சட்டம் - 1947, உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் போன்ற வற்றுக்கு முரணாகவும் எதிராகவும் உள்ளது. தொழில் தகராறு சட்டம் 25 (N), எந்தவொரு பணி நீக்கத்தையும் அரசிடம் தெரிவித்து, முறையான ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடை முறைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் எந்தச் சட்டத்தையும் பின்பற்றாமல் பணிநீக்கம் செய்ய முயல்வது கடும் கண்ட னத்துக்கு உரியது.  ஊடக நிறுவனங்கள் ‘திறமையாக’ பணி நீக்கம் செய்வதாகக் கருதிக்கொண்டு, தாங்க ளாகவே ராஜினாமா செய்வதாக ஊழியர்க ளிடம் கடிதங்களைப் பெற்று பணி நீக்கம் செய்து வருகின்றன. சட்டத்துக்கு புறம்பான இதே வழிமுறையை ‘புதிய தலைமுறை’ நிர்வாகமும் நடைமுறைப்படுத்தி வரு கிறது. பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் சட்ட விரோத பணி நீக்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் ‘புதிய தலை முறை’ அதை தங்கள் நிறுவனத்தில் செயல் படுத்துவது என்ன நியாயம்? ஊருக்குச் சொல்லும் நீதியை, அறத்தை ‘புதிய தலை முறை’யும் பின்பற்ற வேண்டும்.  ஊடக நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக செய்து வரும் சட்டவிரோத பணி  நீக்கங்களை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அர சின் தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஊடகவி யலாளர்களின் குடும்பங்களை வீதிக்கு விரட்டும் இது போன்ற நடவடிக்கைகளை ‘புதிய தலைமுறை’ நிர்வாகம் கைவிட வேண்டும். ஊழியர்களின் பணி நீக்கத்தை திரும்பப் பெற்று, அவர்களின் வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சென்னை  பத்திரிக்கையாளர் சங்கம் (எம்யூஜே) கேட்டுக்கொள்கிறது.