வேலூர், அக். 25- அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க வேலூர் மண்டல 12ஆவது மாநாடு வேலூர் சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. மண்டல தலைவர் கே.இளங்கோ தலைமை தாங்கினார். துணைத் தலை வர் ஏ.ஆர்.ஷாஜகான் சங்க கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் எஸ்.முத்து வரவேற்றார். துணைச் செயலாளர் ஜி.குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார். மண்டல பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் வேலை அறிக்கையும், பொருளாளர் ஜி.சஞ்சீவி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அரசு போக்குவரத்து ஊழியர் கழக சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் வி.தயானந்தன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரை யாற்றினார். தீர்மானங்கள் மாநாட்டில், வேலூர் மண்டலத்தில் பேருந்து களை சுத்தம் செய்வதற்கு எந்த பணிமனைகளிலும் நிரந்தர பணியாளர்களோ தற்காலிக பணியாளர்களோ இல்லாத நிலை நிலவுகிறது. எனவே அனைத்து பணி மனைகளிலும் பேருந்து களை சுத்தம் செய்ய நிரந்தர பணியாளர்களை நிய மிக்க வேண்டும். பேருந்து களுக்கு தேவையான உதிரி பாகங்களை தடை யின்றி அனைத்து பணிமனை களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டலக்குழு தேர்வு மண்டல தலைவராக கே.ரவிச்சந்திரன், பொதுச் செயலாளராக கே. இளங்கோ, பொருளாள ராக ஜி.சஞ்சீவி உள்ள டங்கிய நிர்வாகிகள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.