காஞ்சிபுரம், ஆக 28 - போக்குவரத்து துறையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க காஞ்சிபுரம் மண்டல 23ஆவது ஆண்டு பேரவை கூட்டம் வலியுறுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் என்.சங்கரய்யா நினைவரங்கில், சங்க தலைவர் என்.நந்தகோபால் தலைமையில் நடைப்பெற்ற பேரவை கூட்டத்திற்கு துணை தலைவர் எஸ்.மாயக்கண்ணன் வரவேற்றார். முன்னதாக சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் சங்க கொடியை ஏற்றிவைத்தார். சங்க துணைப் பொதுச் செயலாளர் வி.நாரா யணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாநாட்டைத் துவக்கி வைத்து இந்திய தொழிற்சங்க மையம் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார். பொதுச் செயலாளர் பி.சினிவாசன் வேலை அறிக்கையையும், பொருளா ளர் ஜி.கமலக்கண்ணன் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் உதவித் தலை வர் ஏ.பி.அன்பழகன், சம்மேளன பொரு ளாளர் வி.சசிகுமார், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலா ளர் ஆறுமுக நயினார் பேசினார். தீர்மனங்கள் போக்குவரத்து கழகங்களை தனியார் மையமாக்கும் முயற்சியாக மின்சார பேருந்து, ஏஜென்சி மூலம் பணியாளர்கள் எடுப்பு, பணிமனை பராமரிப்பு, பண்டகசாலை உதிரிபா கம் ஏற்றும் வாகனம் காண்ட்ராக்ட் உள்ளிட்ட தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள டிஏ-வை உச்சநீதிமன்றம், நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் வழங்க உத்தரவிட்டும் வழங்காமல் இருப்பதையும், டிசம்பர் 2022 முதல் ஓய்வுபெற்றோருக்கு வழங்க வேண்டிய ஓய்வுக்கால பணப்பலன் உடனே வழங்க வேண்டும். பணியின்போது மறைந்த தொழிலாளர் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவ தாக சொன்ன தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற வேண்டும், போக்கு வரத்து துறையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. தொழிலாளர்களை பற்றாக் குறையின் காரணமாக விடுப்பு மறுப்பு, தொடர்பணி காரணமாக விபத்துக்கள் பொதுமக்கள் சேவை பாதிப்பு மற்றும் ஏழை எளிய இளைஞர்களுக்கு சமூக நீதி அடிப்படையில் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது எனவே காலியாக உள்ள பணியிடங் களுக்கு நிரந்தர தொழிலாளர்களை அரசே பணிக்கு எடுக்க வேண்டும். 2018ல் ஈட்டிய விடுப்பு சரண்டர் செய்தவர்களுக்கு கழிக்கப்பட்டு இதுவரை பணப்பலன்கள் வழங்கப் படாமல் உள்ளது. மேலும் ஈட்டிய விடுப்பு பெறப்படுவதில்லை, விடுப்பு எடுக்கவும் அனுமதிக்கவில்லை, சரண்டர் செய்யவும் அனுமதிக்கப் படாததால் பல தொழிலாளருக்கு 240 நாட்களுக்கு மேல் சேர்ந்து பயன் இல்லா மல் போவதை சரி செய்ய வேண்டும். பி.எப் லோன் திருமண கடனை தவிர வேறு எதற்கும் லோன் வழங்கப் படுவதில்லை, மருத்துவத்திற்க்கும், நிலம் வாங்க, வீடு கட்ட உள்ளிட்ட வைகளுக்கு அதிகபட்ச தொகையாக பிஎப் லோன் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் இந்த பேரவைக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக ஜி.கமலக் கண்ணன் பொதுச் செயலாளராக பி.சீனிவாசன், பொருளாளராக எஸ்.மாயக்கண்ணன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.