districts

img

குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மறுசீரமைப்பு திட்டம்

சென்னை, ஜூன் 11 - மக்களை பாதிக்காத வகையில் பக்கிங்காம் கால்வாய் மறு சீர மைப்பு திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி ஞாயி றன்று (ஜூன் 11) திரு வல்லிக்கேணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்விட உரிமை பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைக்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தவுள்ளது. சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை வரை யிலான சுமார் 2.7 கிமீ இடைவெளியில் 5ஆயிரம் குடும்பங்கள் வெளி யேற்றப்படவுள்ளது. இதற்காக ரூ. 1282 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் அருகில் வசிக்கும் மக்க ளின் விருப்பத்திற்கு மாறாக, அச்சுறுத்தி பயோ மெட்ரிக் தகவல்களை அதி காரிகள் சேகரிக்க தொடங்கி வுள்ளனர். இங்கிருந்து வெளி யேற்றப்படும் குடும்பங் களை திருவொற்றியூர், கார்கில் நகரில் மறுகுடி யமர்வு செய்ய உள்ளதாக தெரிகிறது.

சென்னையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது பாதிக்கப் படாத பகுதியை வெள்ளத்தை காரணம் காட்டி வெளியேற்றுவது ஏன் என கேள்வி எழுப்பி தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. இதனையொட்டி, பக்கிங்காம் கால்வாய் மறு சீரமைப்பு திட்டம் குறித்து வெளிப்படையாக அறி விக்க வேண்டும். பொது மக்கள். கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதன டிப்படையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பல தலைமுறைகளாக குடியிருக்கும் மக்களின் வாழ்விட உரிமை; வாழ் வாதாரத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த வாழ்விட உரிமையை வலி யுறுத்தி பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. லாக் நகரில் தொடங்கி, நடு குப்பம் வரை இந்த பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிக் குழு சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தை மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வே.ஆறுமுகம், பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன், பகுதி குழு உறுப்பினர்கள் ஆர்.கபாலி, நா.வீரபெருமாள், தா.அன்பழகன், நா.நந்த குமார், ஆர்.உஷாராணி, எஸ்.டி.ராஜேந்திரன், கிளை செயலாளர்கள் கு.ராம மூர்த்தி, தி.ராஜி, க.காந்தி மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.