districts

img

மருத்துவப்படியை உயர்த்தி வழங்கவேண்டும்

கடலூர், ஆக.28- மருத்துவப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் கடலூர் மாவட்ட 8-வது பிரதிநிதித்துவப் பேரவை கடலூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என். காசிநாதன் தலைமை தாங்கினார். ஏ. கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். இணைச் செயலாளர் அரங்க. ராமானுஜம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலை வர் டி. புருஷோத்தமன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கோ.பழனி, பொரு ளாளர் சி. குழந்தைவேலு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். மாநில பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ரவிச்சந்திரன், செயலாளர் எல்.ஹரிகிருஷ்ணன், அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் எம். மருதவாணன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானம் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.  ஊதிய குழு நிலுவை 21 மாதத்திற்கான தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.