districts

img

மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்

சென்னை, அக்.2 – மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசு  சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத் தைகள் நடத்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மது - போதைப் பொருள்  ஒழிப்பு மகளிர் மாநாடு புதனன்று (அக்.2) உளுந் தூர்பேட்டையில் விடுதலை  சிறுத்தைகள் கட்சி நடத்தி யது. மாநாட்டிற்கு தலைமை தாங்கி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தீர்மானங்களை முன் மொழிந்தார். அதன் சுருக்கம் வருமாறு: தமிழ்நாடு உட்பட தேசிய  அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய மது விலக்குச் சட்டம் இயற்ற வேண்டும். மதுவிலக்கு அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு  இழப்பீடு மற்றும் கூடுதல்  நிதிப்பகிர்வு வழங்க வேண்டும். போதைப் பொருட்களை கட்டுப் படுத்தும் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டிற்கு 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மனிதவள பாதிப்பை ஆய்வு  செய்ய மதுவிலக்கு விசா ரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். மதுபான கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப் படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும். மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பரப்புரை இயக்கத்தை அரசு தொடங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதை மீட்பு மையங்களை உருவாக்க வேண்டும். குடி மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தை வட்டார அளவில் தொடங்க வேண்டும். அய்யா வைகுண்டரின் பிறந்த நாளில் மதுக்கடைகளை மூட வேண்டும், டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான பரப்புரை இயக்கத்தில் அனைத்து அரசுசாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக பண்பாட்டு அமைப்புகள், ஊடகங்கள் இணைய வேண்டும் என்பன  உள்ளிட்ட 13 தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி  தொடர்பாளர் குழுத்தலை வர் டி.கே.எஸ்.இளங் கோவன், பால பிரஜாபதி அடிகளார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி,  இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, ஆர்.சுதா எம்.பி., விசிக பொதுச் செயலாளர்கள் ம.சிந்தனைச் செல்வன். து.ரவிக்குமார் எம்.பி, மதிமுக துணைப்பொதுச் செயலாளர் ரொஹையா ஷேக்முகமது, இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாநிலச் செயலாளர் பாத்திமா முசாபர், மனித நேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா,   மகளிர் விடுதலை இயக்க மாநிலச்செயலாளர் இரா.நற்சோனை, பொரு ளாளர் மல்லிகையரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.