கடலூர்,நவ.28- இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்த வேண்டும் என்று கடலூரில் நடை பெற்ற அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் கருத்தரங்கில் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி பேசுகையில், மனிதர் கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற பொதுவுடமை பார்வையி லிருந்து தான் இந்த இஸ் ரேல் - பாலஸ்தீனப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்து கிறோம்” என்றார். 1948 இல் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நாட்டில் இருந்து ஏழு லட்சம் பேர் விரட்டப்படு வார்கள் என்று தெரிந்தே தான் இஸ்ரேல் உருவாக்கப் பட்டுள்ளது. பாலஸ்தீனம் என்பது அமெரிக்காவால் களவாடப்பட்ட நாடு, இஸ்ரேல் நடத்தும் இந்த ஆக்கிரமிப்பு போரை ஒரு நொடியும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசுகையில் “பாலஸ்தீனம் என அழைக்கப்படும் மேற்காசியப் பகுதி களில் ஏழாவது நூற்றாண் டில் இருந்து பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வந்தனர். 1516 ஆம் ஆண்டில் துருக்கியை ஆண்ட ஒட்டமான் சாம்ராஜ் யத்தின் ஒரு மாநிலமாக இது மாறியது” என்றார். 1850-ல் சுமார் மூன்று லட்சம் பாலஸ்தீனர்கள் ஒரு சில ஆயிரம் யூதர்களிடம் வாழ்ந்து வந்தனர். 1925 ஆண்டுகளில் கூட ஏறக் குறைய அதே நிலைதான் நீடித்தது. ஆனால் உலகில் யூதர்களுக்கு எதிராக இருந்த ஒரு எதிர்ப்பு உணர் வினால் அவர்களுக்கு ஒரு தனிநாடு தேவை என கருத்து மேலோங்கியது. பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களை அங்கே குடியேறலாம் என 1948 இல் ஐ நா வில் முன்மொழிந்தது அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய நாடுகள். பாலஸ்தீனம் 45 விழுக்காடும் இஸ்ரேலுக்கும் 55 விழுக் காடு என்றும் நிலம் என பிரிக்கப்பட்டது. இவ்வாறு தான் பாலஸ்தீன நாடு பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகள் களவாடப்பட்டது என்றும் அவர் கூறினார். அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம். மருதவாணன், எஸ்.கே. தேவநாதன், ஆர்.கே. வெங் கட்ரமணி, ஆர்.ஆளவந்தார், மனோகரன், கேத்ரின் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆர். அமர்நாத் வரவேற்றார்.