விழுப்புரம், டிச.23- பெஞ்சால் புயல் காரணமாக ஏமப்பேர் கிராமத்தில் நீரில்மூழ்கிய விளைநிலங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஏமப்பேர் கிராமத்தில் பெஞ்சால் புயல் மழை காரணமாக ஊருக்குள் தண்ணீர் புகுந்தது, மேலும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் மண் அறுத்து சென்றது, ஆற்றுக்கு அருகே மேடான பட்டா நிலங்கள் எல்லாம் ஆற்றுப்பாதையாக மாறிவிட்டது. அதிலிருந்த மோட்டார் கொட்டகை, பம்புசெட்டுகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது. வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை யாரும் வந்து பார்த்து கணகெடுப்பு கூட செய்யவில்லை அதனால் மாவட்ட நிர்வாகம் வாழ்வாதாரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனியிடம் மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.