கிருஷ்ணகிரி,ஜன.19 - கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த 15 க்கும் மேற்பட்ட யானைகள் தளி, தேன்கனிக் கோட்டை ,அஞ்செட்டி, உரிகம், ஓசூர் வனப்பகுதிகளில் முகா மிட்டுள்ளன. சில யானைகள்,பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டப் பட்டன. மீதமுள்ள யானைகள் ஓசூர் வனப்பகுதியில் முகா மிட்டு சானமாவு கிராமத்தின் வெங்கடேசன் தோட்டத் திலும்,அருகில் உள்ள விவசாயிகளின் தென்னை,பப்பாளி, ராகி,தக்காளி,நெல்,வாழை,வெள்ளரி, முட்டைக்கோஸ், உள்ளிட்டவைகளை மிதித்து சேதப்படுத்தி வரு கின்றன. யானைகளை உடனடியாக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும், அழிக்கப்பட்ட காய்கறிகள்,தென்னை, பப்பாளி, நெல் வயல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத் துறை,காவல்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.