கடலூர், பிப்.4- தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய, கிராமத்து பள்ளி களின் எதிர்காலத்தை தற்கொலைக்கு கொண்டு செல்லக்கூடிய அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும், பள்ளி கல்வித்துறை அமைச்சர், சங்கங்களுடன் ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைக ளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. ஜெக நாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலச் செயலாளர் ஜோ. கிரிஸ்டோபர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் சா.அந்தோணி ஜோசப், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செய லாளர் மு.சிற்றரசு, மாவட்டத் தலை வர் டி.குமரவேல், பொருளாளர் சங்கர நாராயணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வெங்கடாசலம், உள்ளிட்டோர் உரையாற்றினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஒருங்கி ணைப்பாளர் பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.