districts

img

மின் கட்டண உயர்வை ரத்து செய்க! மின்னரங்க இடைக்குழு மாநாடு கோரிக்கை

  சென்னை, செப். 11 -   மின் கட்டண உயர்வுகளை திரும்ப  பெற வேண்டும் என்று சிபிஎம் மின்னரங்க இடைக்குழு மாநாடு வலியுறுத்தி உள்ளது.  கட்சியின் மத்திய சென்னை மின்னரங்க இடைக்குழு 24ஆவது  மாநாடு புதனன்று (செப்.11) சிந்தா        தரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், தமிழக அரசு ஏற்றுக் கொண்டபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்த வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக மாநாட்டு கொடியை சி.முனுசாமி ஏற்றினார்.  கே.பரந்தாமன் வரவேற்றார். சி.லூயிஸ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். எம்.தயாளன், தி.ஜெய்சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை இடைக்குழுச் செயலாளர்  வி.சீனிவாசன், நிதி அறிக்கையை ஜெ.புண்ணிய கோட்டி ஆகியோர் சமர்ப்பித்தனர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் வாழ்த்தி பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை நிறைவுரையாற்றினார். என்.கௌரி நன்றி கூறினார்.  7 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக வி.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.