திருவண்ணாமலை, அக். 13 – மின்துறை பொதுத்துறையாக நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்னரங்க இடைக்கமிட்டி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னரங்க 8 ஆவது இடைக்கமிட்டி மாநாடு ஞாயிறன்று (அக்.13) தமிழ் மின் நகரில் உள்ள பிடிஆர் நினைவகத்தில் நடைபெற்றது. மாநாடு கொடியை ஆர்.சிவராஜ் ஏற்றி வைத்தார். வி.எம்.வெங்கடேசன் , அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஜெ.முனியப்பன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் மு.பாலாஜி தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை இடைக்குழு செயலாளர் கே.காங்கேயன் சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பிரகலநாதன் வாழ்த்துரை வழங்கினார். எஸ். ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். பி.சம்பத் நன்றி கூறினார். புதிய இடைக்குழு 7 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக மு.பாலாஜி தேர்வு செய்யப்பட்டார். மின்துறை பொதுத்துறையாக நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசாணை 100 முத்தரப்பு ஒப்பந்தத்தை நியாயப்படி மாற்றி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.