districts

img

ஓய்வூதிய உரிமையை பாதுகாக்க மின்வாரிய ஓய்வுபெற்றோர் தர்ணா

விழுப்புரம், மார்ச்.11- விழுப்புரம் மாவட்ட தலைமை  மின்சார வாரிய அலுவலகம் முன்பு திங்களன்று தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கருணா போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கிளைத் தலைவர் சி.ஜெயராமன் தலைமை தாங்கினார், போராட்டத் தில் மாநிலத் துணைப் பொதுச்  செயலாளர் ஆர்.ராமநாதன்  கலந்துகொண்டு ஓய்வூதியர் களின் உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கும் சரத்து களை முத்தரப்பு ஒப்பந்தத்தில் இணைக்க வலியுறுத்தி  பேசி னார். போராட்டத்தில் கிளைச் செயலாளர் எம்.புருஷோத்தமன், மண்டல செயலாளர் தங்க.அன்பழகன், மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டு  போராட்டத்தை வாழ்த்தி பேசினர், இதில் பொருளாளர் எம்.சந்திரசேகரன், எஸ்.கண்ணை யன், கே.ராஜேந்திரன், ஆர்.சண்முகம், பி.ரவி, ஜி.தண்டபாணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கள்ளக் குறிச்சி கிளை சார்பில் உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. தலைமை கிளை தலைவர் கே.ஆறுமுகம், அனைத்து துறை  ஓய்வூதியர் சங்கம் எஸ்.கே.பார்த்தசாரதி, வட்ட கிளை செயலாளர் ஆர்.ராஜாமணி, துணைத் தலைவர்கள் ஆர். அம்பாயிரம், பி.விருத்தகிரி, மற்றும் கே.சீனிவாசன், தங்க வேல், கே. விஜயகுமார், தங்கராசு  மற்றும் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.