districts

img

மின் இணைப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப். 6 - மின் இணைப்பு பணி யாளர்களின் (எக்ட்ரிக்கல் தொழிலாளர்கள்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.6) சென்னை கிண்டி யில் உள்ள அரசு தலைமை  மின் ஆய்வாளர் அலுவல கம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 3 ஆண்டுக்கு ஒரு முறை  என்பதை மாற்றி, ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு நடத்தி மின் இணைப்பு பணியாளர்களுக்கு எச் உரிமம் வழங்க வேண்டும், மின் ஆய்வு உரிமம் வழங்க, புதுப்பிக்க உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எல்க்ட்ரிகல் தொழிலாளர் சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் மின் இணைப்பு பணியாளர்கள் உள்ளனர். மின் இணைப்பு பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மின் இணைப்பு பணியாளர்கள் விபத்தில் சிக்கி உடல் ஊனமுற்றால், மரணம் ஏற்பட்டால் இழப் பீடு வழங்க வேண்டும், மின்னாய்வு உரிமம் பெற்ற வர்களிடம் லைசன்ஸ் ஹோல்டர் சான்றிதழை பெற்ற பின்னரே மின்  இணைப்பு வழங்கும்  முறையை தொடர வேண் டும். மின் இணைப்பு பணி யாளர்கள் எச் உரிமம் பெற 250 ரூபாயாக இருந்த  கட்டணம் ஆயிரம் ரூபா யாக உயர்த்தி உள்ளதை யும், உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை 120 ரூபாயி லிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது போன்ற உயர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், சங்கத் தின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.