districts

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியமே நேரடியாக கூலி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஜன.27) வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளைத் தலைவர் வி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் எம்.தயாளன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்ட பொருளாளர் முருகவேல், நிர்வாகி கவுரி உள்ளிட்டோர் பேசினர்.