districts

img

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மின் விளக்கு அமைப்பு

சிதம்பரம், நவ 29- சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழே இருப்பு பாதை  அமைந்துள்ளது. இந்த பகுதியில் மின் விளக்கு இல்லாததை பயன்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் வழிப்பறி  உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக  பொதுமக்கள் ரயில் நிலையத்திற்கு அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நகர் மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன்,  நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் கூறினார். இதையடுத்து நிரந்தரமாக மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதற்கு  அப்பகுதி பொதுமக்கள் நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.