தேர்தல் கால வாக்குறுதிகளான சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்க ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.12) மாநிலம் தழுவிய உண்ணாநிலைப் போராட்டம் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் அண்ணா சிலை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம். ராணிப்பேட்டையில் நடந்த போராட்டங்களில் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள், அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள், முன்னணி ஊழியர்கள் என ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.