சென்னை, அக்.16- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் திங்கட்கிழமை (அக்.17) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இரு வரும் களத்தில் மோதுகிறார்கள். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில தலைவர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள். இந்தியா முழுவதும் 9,300 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை கள் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்க தேவையான ஓட்டுப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல், ஓட்டு சீட்டுகள் டெல்லியில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 711 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அடை யாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவுக்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஓட்டுச்சீட்டு வழங்கப்படும். அந்த ஓட்டுச்சீட்டில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரது பெயரும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றுள்ளது.